Thursday, April 23, 2009

இப்படியெல்லாம் சர்டிபிகேட் கொடுத்தா !!!

ஒரு மேலதிகாரி தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களின் வேலைத்திறன் பற்றி அளித்த சில குறிப்புகள்:

“அவனுக்குக் காமிராவைப்போல ஞாபக சக்தி - ஆனால் லென்ஸ் தான் மூடியுள்ளது"

"உபயோகப்படுத்துவதற்கு முன்னாலேயே தனது மூளையை விஞ்ஞானத்திற்கு தானம் செய்துவிட்டான்"

"இவனுக்கு இரண்டு மூளை - ஒன்றைக் காணோம் - இன்னொன்று காணாமற்போன மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறது."

"அவன் அவ்வளவு மூளையற்றவன். ஒளி கூட அவனைக் கடந்து செல்லும்போது வளைந்துதான் போகும்."

"மூளைக்கு வரி விதித்தால் நிச்சயமாக இவனுக்கு வரிவிலக்கு கிடைக்கும்."

"அவனுடைய யோசனைகளுக்கு நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் அதற்குக்கூட பாக்கி சில்லறை கிடைக்கும்."

"அறுபது நிமிஷத்தைப் பார்ப்பதற்கு அவனுக்குத் தொண்ணூறு நிமிஷங்கள் ஆகும்."

Friday, April 3, 2009

இதுக்கு பேர் தான் லொள்ளு ...


நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்…

சிட்டிசன்

கோர்ட் சீன்அஜித்:

அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி:

எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

கோர்ட் சீன்அஜித்:

தெரியாதே…

நீதிபதி:

அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…


காக்க காக்க

ஜீவன்:

அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…

சூர்யா:

அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ


சந்திரமுகி

பிரபு:

என்ன கொடுமை சரவணன்…

தலைவர்:

எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?


ரமணா

வி.கா:

டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்:

அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா:

அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”

கௌரவம்

சிவாஜி:

கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…

பத்மினி:

ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்???