Sunday, March 29, 2009

எதுவா இருந்தா என்ன ???


இதோ பாருங்க, இன்னைக்கு உங்களுக்கு ஒரு நல்ல சேதி, என்ன.. இன்னைக்கு வீட்டுல நீ சமைக்கப் போறதில்லையா? அய்யோ அதில்லே.. நீங்க அப்பா ஆகப்போறீங்க, அதான் ஏற்கனவே ஆயிட்டேனே, இரண்டாவது தடவை, ஓ.. அப்படின்னா நம்ம ராமுவுக்கு ஒரு தம்பி பொறக்கப் போறான், ஏன் தங்கச்சியா இருக்கப்புடாதா? உனக்குஒரு விஷயம் தெரியுமா?

கருவிலிருக்கிற குழந்தைக்கு தொற்று நோய் ஏற்படாமேஇருக்கறதுக்குத் தாய்க்குத் தடுப்பு ஊசி போடுறது சம்பந்தமா அமெரிக்கடாக்டர்கள் ஆராய்ச்சி செஞ்சிக் கிட்டிருக்காங்களாம், அப்படியா? ஆமாம்,கருவிலே இருக்கிற குழந்தையை டெட்டனஸ், டிப்தீரியா மாதிரியான நோய்கள்தாக்காம இருக்கிறதுக்கு தாயின் நஞ்சுக்கொடி வழியா குழந்தைக்குசெல்லக்கூடிய மருந்துகளை கடந்த சில ஆண்டுகளாகவே டாக்டர்கள் ரொம்பக்கவனத்தோடு குடுத்துக்கிட்டு வர்றாங்களாம். சில பாக்டீரியாக்கள்கருக்குழந்தையைத் தாக்காம இருக்கிறதுக்காக தாய்க்குத் தடுப்பூசி போடுறதும்ஒரு சிறந்த வழின்னு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க, பரவாயில்லையே, நமக்கும் சீக்கிரம் அந்த வசதி வந்தா நல்லா இருக்கும், அது வரைக்கும் உன் வயிற்றுலேயே குழந்தை காத்துக் கிட்டிருக்குமா?

ஸ்.. மெதுவா பேசுங்க.. அதோ நம்ம பையன் வரான். அவன் காதுல விழப்போவுது, எப்படியும் அவன் காதுலே விஷயத்தைப் போட்டுத்தானே ஆகணும், சின்னக்குழந்தை அவன், எப்படி சொல்லி புரியவைக்கிறது? நான் பக்குவமா சொல்றேன். குழந்தை சைக்காலஜி எனக்குத்தெரியும் டேய், ராமு கண்ணா, இப்படிவா, என்னப்பா? வாயிலே விரலை வைக்காதே எடுத்துடு, எடுத்துட்டேன், நான் ஒன்னு கேப்பேன்.. நீ பதில் சொல்றியா? உம், உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சிப் பாப்பா வேணுமா?

எதுவா இருந்தா என்னப்பா? அபார்ஷன் ஆகாமே இருந்தா சரி,

No comments: